1 மதுரைக் காஞ்சி ( தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது) உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல் தவாப் பெருக்கத்து அறா யாணர் 210 அழித்து , ஆனாக் கொழுந்திற்றி இழித்து ஆனாப் பல சொன்றி உண்டு , ஆனாக் கூர் நறவின் தின்று , ஆனா இன வைகல் நிலன் எடுக்கல்லா ஒண்பல் வெறுக்கைப் 215 பயன் அறவு அறியா வளம் கெழு திருநகர் நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப் பாணர் உவப்பக் களிறு பல தரீஇ , கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ , 220 மறம் கலங்கத் தலைச் சென்று வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி , நாள் ஈண்டிய நல் அகவர்க்குத் தேரோடு மா சிதறி , சூடுற்ற சுடர்ப் பூவின் 225 பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின் விழுமிய பெரியோர் சுற்றம் ஆகக் கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு , பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார் 230 பரு...